Saturday, April 19, 2008

Bharathiraja Speaks About Rajini

''முதல் தடவையா ரஜினி தமிழர்களின் உணர்வுகளை மதிச்சு, வெளிப்படையாகக் குரல் கொடுத்ததா, பரவலாக பெரிய கருத்து இருக்கு. அதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க?''

''ரஜினி, எப்பவும் யாருக்கும் பயப்படுற ஆள் கிடையாது. ரஜினி என்னிக்கும் தன் கருத்துக்களை மத்தவங்களுக்காக ஒளிச்சும் மறைச்சும் சொல்ற ஆள் இல்லை. எனக்கு ரஜினி காவிரி பிரச்னையில் தனியா உண்ணாவிரதம் இருந்தது மட்டும்தான் பிடிக்கலை. தனிப்பட்ட முறையில், நான் பார்த்த நடிகர்களில் பொய் சொல்லாத நடிகன். தமிழ் நீரோட்டத்தில் ரஜினி கலந்துட்டார். இனிமேல் யாரும் அவரைத் தனிமைப்படுத்திப் பேசக் கூடாது. அவர் தமிழ்நாட்டுக்கு விசுவாசமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருக்கார். இதுதான் நல்ல மாற்றம். இந்த உண்ணா விரதம் அவரை அசலா வெளியே கொண்டுவந்திருக்கு!''

''சத்யராஜின் பேச்சு எப்படி இருந்தது?''

''சத்யராஜ் ரொம்ப உணர்ச்சிபூர்வமாப் பேசினார். ஆனா, மனசுல நினைக்கிறதையெல்லாம் வெளியே கொட்டுறது தப்பு. சக கலைஞனை அதே மேடையில் வெச்சுக்கிட்டு, கொஞ்சம் ஒரு லைன் தாண்டிப் பேசிட்டாருங்கிறது வருத்தமா இருக்கு. ஆனா, பலவீனப்பட்டு இருந்த சமயத்தில் சத்யராஜ் ஓங்கிச் சத்தமிட்டாரே... அதைப் பாராட்டணும். மனுஷனுக்கு ஆவேசம் இல்லைன்னா, அவன் தமிழனே கிடையாதே!''

''என்னது, உங்க மகன் மனோஜ், இப்போ ஷங்கரிடம் உதவியாளராச் சேர்ந்திருக்காரே?''

''மனோஜ் ஒரு நாள் என்கிட்டே வந்தான். 'ஷங்கர் சார் ரோபோ பண்ணப்போறார். அதில் இருந்தா, ஒரு காலேஜ்ல படிச்ச மாதிரி இருக்கும். ஷங்கர் சார்கிட்டே கேட்கப்போறேன்னு சொன்னான். நான் சிபாரிசு பண்ண மாட்டேன்னு சொல்லிட்டேன். இவனே ஷங்கர்கிட்டே போயிருக்கான். அவருக்கு ஷாக். 'நீங்களே ஒரு டைரக்டரின் பையன். உங்களை நான் எப்படி வெச்சுக்க முடியும்?'னு கேட்டிருக்கார். 'நான் பாரதிராஜாவுக்குப் பையன்கிறது எங்க வீட்டோடு முடிஞ்சுபோயிடும். அப்பாகிட்டே, மணி சார்கிட்டே இருந்தேன். இன்னும் பத்தலையோன்னு தோணுது சார்'னு சொல்லியிருக்கான். மூணு தடவை கூப்பிட்டுப் பேசி, அவனைத் தன் அசிஸ்டென்ட்டா சேர்த்துக்கிட்டார். அட, எனக்கே மணிரத்னம், ஷங்கர்கிட்டே ஒரு அசிஸ்டென்ட்டா வேலை பார்க்கணும்னு ஆசையா இருக்குங்க!''
 
Courtesy : Ananda Vikatan